பல நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களின் முகத்தை காண முடிந்த நெகிழ்ச்சி தருணம்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள் பத்து நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை முதல் முறையாக கேமரா மூலம் காண முடிந்தது.

அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

மேலும் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டதை அடுத்து தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் உயிருடன் மற்றும் பாதுகாப்பாக இருப்பது உறுதியான பிறகு மீட்புப் பணி தீவிரமடைந்துள்ளது.

அவர்களை பத்திரமாக மீட்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் புதிதாக அமைக்கப்பட்ட குழாய் வழியாக தொழிலாளர்களுக்கு சூடான சமைத்த உணவு, தண்ணீர் போன்றவற்றை அனுப்பி வருகின்றனர்.