பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!!

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!!

பொன்னமராவதி பிப்,16 :

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் இல்லத்திற்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அதிமுக 3வது வார்டு முன்னாள் கிளை செயலாளர் முசா,பாலமேடு பகுதியை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் தேவா,சிவன் கோவில் பகுதியை சேர்ந்த மலைச்சாமி, புதுவளவு பகுதியை சேர்ந்த அப்துல் முத்தலிப்
ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் எதிர்பாராமல் உயிழந்தனர். இதனால் வாடிய அவர்களது குடும்பத்திற்கு நேரில் சென்ற புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் வைரமுத்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

இந்நிகழ்வில்
பொன்னமராவதி நகர செயலாளர் ராஜேந்திரன், அவை தலைவர் பராசக்தி,நகர பொருளாளர் பழனியப்பன்,மாவட்ட எம்ஜிஆர் பணி இணைச் செயலாளர் நெடுஞ்செழியன் அதிமுக நிர்வாகி பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.