சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 300க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஆக இளையவருக்கு 15 வயது என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனை இரண்டு வாரங்கள் நீடித்து நேற்று (மார்ச் 6) முடிவடைந்தது.

சந்தேக நபர்கள் 1,200க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மோசடிகளால் ஏற்பட்ட மொத்த இழப்பு S$9 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.