அனைவரையும் சிந்திக்க வைத்த செயல்!!

அனைவரையும் சிந்திக்க வைத்த செயல்!!

அமீரக செல்வந்தர் ஒருவர் அனைவரும் சிந்திக்கும் வகையில் கூறிய விஷயம்…..


என் தந்தை ஒட்டகத்தில் சவாரி செய்தார். நான் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் போகிறேன்.
என் மகன் லேண்ட் ரோவர் காரில் போகிறான்.என் பேரனும் லேண்ட் ரோவர் காரில் செல்வான்.
ஆனால் என் கொள்ளுப்பேரன் மீண்டும் ஒட்டகத்தில் போவான்.

இதற்கான விளக்கம், கடினமான நேரங்கள் வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றது.
வலிமையான மனிதர்கள் சுலபமான சொகுசான சந்தோசமான வாழ்க்கையை அவர்களுடைய அடுத்த தலைமுறைக்கு உருவாக்குகிறார்கள்.
சுலபமான சொகுசான சந்தோசமான வாழ்க்கை பலவீனமான மனிதர்களை உருவாக்குகின்றது.
பலவீனமான மனிதர்கள் மீண்டும் கடினமான நேரத்தை உருவாக்குகிறார்கள்.

தன் வம்சாவளிகள் வாழ்க்கையில் கஷ்டப்பட கூடாது என்பதற்காக கடினமான நேரங்களில் வலிமையாக உழைக்கும் மனிதர்களாக மாறுகின்றனர். அடுத்தடுத்த தலைமுறை சொகுசான, சந்தோசமான வாழ்க்கையை வாழுகிறார்கள். பலவீனமான மனிதர்களாக மாறிய அவர்கள் கடினமான நேரங்களில் உழைக்க மீண்டும் வலிமையான மனிதர்களாக மாறுகிறார்கள்.