சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை!! 16 வயதுடையவர் உட்பட 5 பேர் கைது!!

சிங்கப்பூரில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பணமோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் $680,000 சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பணமோசடி வழக்குகளில் சந்தேகத்திற்குரிய ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்கள் ஐந்து பேரும் 16 முதல் 43 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் 17 முதல் 67 வயதுக்கு உட்பட்ட 47 பேரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறியது.

இது போன்ற பணமோசடி குற்றம் புரிவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் தீர்ப்பளிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் இது போன்ற பணமோசடிகளில் சிக்கி கொள்வதை தவிர்க்க தங்களது சிங்பாஸ் மற்றும் வங்கி கணக்குகளை மற்றவர்களிடம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியது.