சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 2 கடத்தல்காரர்கள் உட்பட 36 பேர்!!

சிங்கப்பூரில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் அனைவரும் டெலிகிராம் மூலம் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையின் போது சுமார் $19,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.சிங்கப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருட்களை கடத்துவது சட்டப்படி குற்றமாகும்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.