சிங்கப்பூரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை!! சிக்கிய 25 பேர்!!

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை!! சிக்கிய 25 பேர்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள துவாஸ் சோதனைச் சாவடியில்
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களிடம் திடீர் வாகன சோதனையை சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டது.

இந்த வாகன சோதனை மே 16ஆம் தேதி அன்று நடந்தது.சுமார் 400 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களிடம் சோதனை நடத்தினர்.

அதில் 18 வயதிலிருந்து 38 வயதுக்குட்பட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை வைத்து வாகனம் ஓட்டியதும்,முறையான இன்சூரன்ஸ் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரிய வந்துள்ளது.

செல்லுபடியாகாத உரிமத்துடன் இன்சூரன்ஸ் காப்புறுதி இல்லாத மோட்டார் சைக்கிளை மற்றொருவர் ஓட்டுவதை அனுமதித்த குற்றத்திற்காகவும் 21 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து சட்டத்துக்கு கட்டுப்பட்டு, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.