துவாஸ் சோதனைச் சாவடிக்குச் செல்லும் இரண்டாவது இணைப்பில் ஏற்பட்ட விபத்து…!!

துவாஸ் சோதனைச் சாவடிக்குச் செல்லும் இரண்டாவது இணைப்பில் ஏற்பட்ட விபத்து...!!

சிங்கப்பூர்: துவாஸ் சோதனைச் சாவடி செல்லும் சாலையில் நேற்று( ஆகஸ்ட் 28) விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

துவாஸ் சோதனைச் சாவடிக்கு செல்லும் அனைத்து தடங்களும் செயல்பாட்டில் உள்ளன.

முன்னதாக, மூன்றில் இரண்டு தடங்கள் மூடப்பட்டிருந்ததாக ஆணையம் தெரிவித்தது.

எனவே துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் சிறிது நேர தாமதத்தை எதிர்கொண்டனர்.

நிலைமை சரி செய்யப்பட்டதும் சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது.

எனவே புதுப்பிப்புகளுக்கு முகநூல் பக்கத்துடன் இணைந்திருக்குமாறு வாகன ஓட்டிகளை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.