இரண்டு லாரிகள் மோதி கொண்ட விபத்து!! 18 பேர் காயம்!!

இரண்டு லாரிகள் மோதி கொண்ட விபத்து!! 18 பேர் காயம்!!

சிங்கப்பூர்: ஆயர் ராஜா விரைவுச் சாலை (AYE) விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த விபத்தானது மெரினா கடற்கரை விரைவுச்சாலைக்கு செல்லும் வழியில் பினாய் சாலை வெளியேறும் பகுதிக்கு அருகில் நடந்துள்ளது.

விபத்து குறித்து ஜூலை 4 காலை 6.30 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவில், இந்த விபத்துக்கு சமந்தப்பட்டவையாக இரண்டு லாரிகள் மற்றும் ஒரு கனரக வாகனம் காணலாம்.

அந்த வீடியோ பதிவில் 2 லாரிகள் மோதிக் கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்தில் லாரியில் இருந்த 17 ஆண் பயணிகளும், 43 வயது மதிக்கத்தக்க டிரக் ஓட்டுநரும் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சுயநினைவுடன் இருந்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.