உணவு பாதுகாப்பு விதிகளை மீறியதால் அபு முபராக் உணவகத்திற்கு அபராதம்!!

உணவு பாதுகாப்பு விதிகளை மீறியதால் அபு முபராக் உணவகத்திற்கு அபராதம்!!

உணவு பாதுகாப்பு விதிமீறல்களுக்காக தெம்பனிஸ்ஸில் உள்ள அபு முபாரக் உணவகத்திற்கு 4,700 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு உணவு உண்டவர்களுக்கு இரப்பை குடல் அழற்சி பாதிப்பு ஏற்பட்டது.

அதனை சுகாதார அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகிய இரண்டும் இணைந்து தெரிவித்தன.

மருத்துவமனையில் இருவர் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் பல்வேறு விதிமீறல்கள் வெளிவந்தது.

உணவு சமைக்கும் இடத்தில் கரப்பான் பூச்சிகள் இருப்பது தெரிய வந்தன.

உணவகங்கள் உணவு பாதுகாப்பை கடைபிடிக்காமல் மீறிவோருக்கு $2000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.

மீண்டும் விதிகளை மீறினால் ஒவ்வொரு நாளும் 100 வெள்ளி வீதம் அபராதமாக விதிக்கப்படும்.