சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!!

சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!!

சிங்கப்பூரில் செங்காங் வேலையிடத்தில் பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அது வேன் ஒன்றின் மீது விழுந்ததில் வேன் நொறுங்கியது.

இச்சம்பவம் நேற்று (மார்ச் 10) ஆம் தேதி நிகழ்ந்தது.

இந்த விபத்தில் 28 வயதுடைய ஓட்டுநர் காயமடைந்தார்.அவரை மீட்டு செங்காங் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் பொழுது சுயநினைவுடன் இருந்ததாக தெரிவித்தது.

இச்சம்பவத்தின் தொடர்பாக பாரந்தூக்கி ஓட்டுநர் (42) கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு நேற்று மாலை ஐந்து மணியளவில் தகவல் வந்ததாக தெரிவித்தது.