Singapore news

சிங்கப்பூரில் கோவில் பணத்தை ஏமாற்றிய பெண்ணுக்கு மூவாண்டு சிறைத்தண்டனை!

சிங்கப்பூரில் டேஃபு லேனில் உள்ள ஹொங் சான் கோயில் பணத்தை ஏமாற்றிய பெண். தன் குற்றத்தை தானே வந்து ஒப்புக் கொண்டார்.

சீனாவைச் சேர்ந்த Li Fangfang காசோலையில் மோசடி செய்து கோயிலுக்குச் சொந்தமான 207 வெள்ளியைத் திருடினார்.

திருடிய பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஓராண்டு காலம் இதனைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

அவரே தாமாக முன் வந்து தன் தவறைக் கடிதம் மூலம் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

இவர் ஹாங்காங் சென்றுவிட்டு திரும்பி வந்து காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.அவருடைய குற்றத்திற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

கோவில் பணத்தை ஏமாற்றியதால் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.