உணவகத்தில் கத்தியைக் காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பெண்!! 9 மணி நேரத்தில் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை!!

உணவகத்தில் கத்தியைக் காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பெண்!! 9 மணி நேரத்தில் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை!!

சிங்கப்பூர் : ஆகஸ்ட் 29-ஆம் தேதி அன்று காலை தாம்சன் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் ஆயுதங்களுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய பெண் ஒருவரை காவல்துறை கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை சுமார் 9.34 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.

அங்கு மேஜையில் இருந்த கத்தியை பயன்படுத்தி வாடிக்கையாளரிடம் கொள்ளையடிக்க அந்த பெண் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அங்கிருந்த உணவக ஊழியர்கள் தலையிட்டனர். அதனால் அவரால் கொள்ளையடிக்க முடியவில்லை. உடனே அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

காவல்துறை உணவகத்திற்கு விரைந்தது.

அந்த பெண்ணின் அடையாளத்தை அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் உதவியுடனும் மற்றும் விசாரணை அடிப்படையிலும் கண்டறியப்பட்டது.

அவரை காவல்துறை 9 மணி நேரத்தில் கைது செய்தது.மேலும் அந்த பெண்ணிடம் இருந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆயுதம் ஏந்தி கொள்ளையடிக்க முயன்றதாக அந்த பெண் மீது ஆகஸ்ட் 30ஆம் தேதி(இன்று) குற்றம் சாட்டப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அந்த பெண் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Follow us on : click here ⬇️