பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை!!

பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை!!

பொன்னமராவதி,பிப்.17-
பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை. போலீசார் விசாரணை.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோவில் தெருவில் வசித்து வருபவர்
சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி வயது 41 சுப்பிரமணியன் ஆசாரி வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 1) சந்தோஷ் வயது 25, 2) சௌந்தர்யா வயது 23 w/o அரவிந்த் மதுரை,
3) பிரதாப் வயது 21.

இந்நிலையில் குடும்பத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை அதிகமாக இருந்ததாகவும் மேற்படி இறந்த பெண்ணின் கணவர் இதனை பலமுறை கண்டித்துள்ளார். இதனால் காலை 10.25 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த பெண் கணவர் சுப்பிரமணியனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் சாகப்போவதாக கூறியுள்ளார். பொன்னமராவதி அருகே கொன்னையூரில் ஆசாரி வேலை பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணி உடனே புறப்பட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.

வீட்டின் கதவு உள்ளே பூட்டியபடி இருந்துள்ளது. பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் மின்விசிரியில் சேலையை வைத்து கட்டி தூக்கிட்ட படி தொங்கியுள்ளார். பிறகு அருகில் இருந்த நபர்கள் மூலமாக பிரேதத்தை கீழே இறக்கியுள்ளனர். பின்பு பொன்னமராவதி போலீசார் பிரேதத்தை மீட்டு பொன்னமராவதி வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.