Latest Singapore News

சிங்கப்பூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட ஈஸ்டர்!

நேற்று சிங்கப்பூரில் ஈஸ்டர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர்.

சிறுவர்களுக்கான அரும்பொருளகத்தில் சிறப்பு ஈஸ்டர் நடவடிக்கைகளில் குழந்தைகளுக்காகவும் இடம் பெற்றிருந்தது.

இதில், எண்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின்போது கோவிட்-19 கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது.

தற்போது கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.