மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை அறை மீது மோதிய வாகனம்!!

மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை அறை மீது மோதிய வாகனம்!!

அமெரிக்க மாநிலமான டெக்சாஸின் தலைநகர் ஆஸ்டினில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை அறையின் மீது வாகனம் மோதியது.

இச்சம்பவம் பிப்ரவரி 13ஆம் தேதியன்று மாலை 5.38 மணி அளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் கார் டிரைவர் உயிரிழந்தார்.

மேலும் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐந்து பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.