இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!! 8 பேர் பலி!!

இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!! 8 பேர் பலி!!

இந்தியாவில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று ( செப்டம்பர் 7 ) நேற்று இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் 8 பேரின் உடல்கள் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்ததாக கூறப்படும் அந்த கட்டிடமானது ஒரு வர்த்தக கட்டிடமாகும்.இதில் பல்வேறு சிறிய நிறுவனங்கள் செயல்பட்டும் வந்துள்ளது.

இந்த விபத்து நடந்ததற்க்கான காரணம் தெரியாத நிலையில்
அந்த கட்டிடத்தின் தூணில் விரிசல் இருந்ததாகவும் பருவ மழை பெய்து வரும் நிலையில் இந்த விரிசல் மோசமாகக் கூடும் என்பதாலும் , முதல் தளத்திற்கு மாறினேன் என்றும் அங்கு வேலை பார்த்த ஒருவர் PTI – யிடம் கூறினார்.

மேலும் திடீரென கட்டடம் இடிந்து விழுந்தகவும் கூறினார்.

8 பேரின் உடல்கள் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில் மேலும் 28 பேர் காயமடைத்துள்ளனர்.அதுமட்டுமின்றி கட்டிட இடிபாடுகளின் இடையே இன்னும் சிலர் சிக்கி இருக்க கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Follow us on : click here ⬇️