வேலைக்கு சென்று கொண்டிருந்த இரண்டு விமானிகளுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!!

வேலைக்கு சென்று கொண்டிருந்த இரண்டு விமானிகளுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!!

Ryanair விமானிகள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர்.இந்த சம்பவம் இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் நடந்தது.

அவர்கள் இருவரும் லிவர்பூல் விமான நிலையத்திற்கு நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது.

டாக்ஸியில் பயணித்த 28 வயதுடைய மாட் கிரீன்ஹால், 24 வயதுடைய ஜேமி பெர்னாண்டஸ் ஆகியோர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக BBC வெளியிட்டுள்ளது.

மேலும் கடுமையான காயங்களுக்குள்ளான டாக்ஸி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் இரு லாரி மற்றும் ஒரு கார் விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளது.

ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் அடிப்படையில் 61 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.