புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!!

புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!!

லண்டனில் மன்னரின் காவல் குதிரையுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சுற்றுலா பயணி ஒருவர் குதிரையின் அருகில் சென்றார். அப்போது திடீரென குதிரை அவரை கடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அந்த பெண் மயங்கி விழுந்தார்.

மத்திய லண்டன் அருங்காட்சியகத்திற்கு வெளியே இருந்த குதிரையுடன் படம் எடுக்க மக்கள் வரிசையில் நின்றனர்.

குதிரையுடன் புகைப்படம் எடுப்பதற்காக அந்த பெண்மணி அருகில் நின்றபோது, ​​எதிர்பாராதவிதமாக அது அவரது கையை கடித்துள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் பெண் வலி தாங்காமல் அலறியடித்தபடி அங்கிருந்து வெளியேறிச் செல்கிறார்.

அவருடன் வந்த சக சுற்றுலா பயணிகள் அவருக்கு மருத்துவ உதவி செய்தனர்.

மேலும் இது தொடர்பான மற்றொரு வீடியோவில், அந்த பெண் மயங்கி தரையில் கிடப்பதை பார்க்க முடிகிறது.

மேலும் காவல் குதிரைகளுக்கு அருகில் நிற்பது ஆபத்தானது என்றும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல் குதிரை உதைக்கலாம் அல்லது கடிக்கலாம் என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்கும் மோகத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் சென்று இதுபோன்ற விபரீதத்தில் சிக்கி மாட்டிக்கொள்கின்றனர்.