ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!!

ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!!

ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் மார்ச் 27ஆம் தேதியன்று நடந்தது.

இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

சுமார் 35 பயணிகள் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

52 பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுனர்களுடன் பேருந்து பெர்லினில் இருந்து சூரிச் நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு ஓட்டுனர்களும் உயிர்பிழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.

இந்த விபத்து குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.