நான்கு வாகனங்கள் மோதி கொண்ட பயங்கர விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!!

நான்கு வாகனங்கள் மோதி கொண்ட பயங்கர விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூரில் மே 28-ஆம் தேதி ஒரு டாக்ஸி மற்றும் மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் மார்தபன் சாலை மற்றும் பாலஸ்டியர் சந்திப்புக்கு அருகே நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு காலை 9.10 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவித்தது.

வாகனங்கள் லாவெண்டர் தெருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேர்ந்தது.

54 வயதுடைய டாக்ஸி டிரைவர் மற்றும் 35 வயதுடைய கார் டிரைவர் ஆகிய இரண்டு டிரைவர்களும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இருவரும் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.