சிங்கப்பூரில் நடந்த கோர விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 19 வயது இளைஞர்!!

சிங்கப்பூரில் நடந்த கோர விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 19 வயது இளைஞர்!!

சிங்கப்பூரின் லென்ட்டர் அவென்யூவில் பேருந்து, லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 19 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பிப்ரவரி 2ஆம் தேதியன்று நடந்தது.

இச்சம்பவம் குறித்து பிற்பகல் 1:40 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.