பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி விளக்கில் டாட்டா ஏசியும்,இருசக்கர வாகனமும் மோதி விபத்து!!

பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி விளக்கில் டாட்டா ஏசியும் ,இருசக்கர வாகனமும் மோதி விபத்து!!

பொன்னமராவதி, பிப்.27-
பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி விளக்கில் டாட்டா ஏசியும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 4 நபர்கள் காயம் போலீசார் விசாரணை.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி விளக்கில் இருசக்கர வாகனமும் டாட்டா ஏசி வாகனமும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு வலையப்பட்டி பாப்பாயில் ஆச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் பொன்னமராவதில் இருந்து செவலூரை நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனமும் கொன்னையூரில் இருந்து பொன்னமராவதி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த கொன்னையூர் யோகானந்தம் மகன் ஜவகர் காயம் ஏற்பட்டுள்ளார்.

மேலும் டாட்டா ஏசி வாகனத்தில் வந்த திருவாரூர் மாவட்டம் குடவாசல் கணேசன் மகன் கலையரசன் வயது 27, மதியழகன் மகன் மகேந்திரன் வயது 24, ராமமூர்த்தி மகன் ரவிச்சந்திரன் வயது 24 ஆகியோர் உடம்பில் ஆங்காங்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.