எதிரணியினரின் உருவ பொம்மையுடன் சண்டையிடும் டேக்வாண்டோ மெய்நிகர் போட்டி….

எதிரணியினரின் உருவ பொம்மையுடன் சண்டையிடும் டேக்வாண்டோ மெய்நிகர் போட்டி....

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முதன்முறையாக,இந்த ஆண்டு நவம்பரில் சர்வதேச டேக்வாண்டோவின் வெற்றியாளருக்கான மெய்நிகர் போட்டியை நடத்த உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கு பெறும் நபர்கள் ஒருவருக்கொருவர் நேரடி தொடர்பில்லாமல் எதிர்தரப்பினரின் உருவ பொம்மையுடன் மோதுவதே டேக்வாண்டோ மெய்நிகர் போட்டி ஆகும்.

புதிய டேக்வாண்டோ மெய்நிகர் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வயது, எடை மற்றும் பாலினம் போன்ற எந்த வரம்புகளும் இல்லை.

இதில் வயது வித்தியாசம் இன்றி யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.

இதன் காரணமாக, விர்ச்சுவல் டேக்வாண்டோ போட்டியானது விளையாட்டு ஆர்வலர்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

முதற்கட்ட டேக்வாண்டோ மெய்நிகர் போட்டியானது,பெரிய போட்டிக்கு தயாராகும் உத்வேகத்தில் வார இறுதியில் விறுவிறுப்புடன் தொடங்கியது.

இப்போட்டியில் மொத்தம் நான்கு பிரிவுகளைக் கொண்டதாக மொத்தம் 40 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.