ஐந்து அறிவு கொண்ட நாயிடம் கொடூரமாக நடந்து கொண்ட ஆறறிவு மனிதன்!!

சிங்கப்பூரைச் சேர்ந்த 39 வயதான Ng Zhaohui Matthew என்ற நபர் நாயைக் கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இதனால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி இரவு 10:45 மணி அளவில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இவர் K9 கனெக்ஷன் என்ற நாய் பயிற்சி மையத்தின் உரிமையாளராக இருந்தார்.

அப்போது அவர் அங்கிருந்த ஒரு நாயை உலோக கிண்ணத்தால் கொடூரமாக அடித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முகநூலில் வெளியானது.

இதை அடுத்து அங்கீகாரம் பெற்ற நாய் பயிற்சியாளர்களின் பட்டியலில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு நாய் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாய் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். S$40,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே தீர்ப்பளிக்கப்படலாம்.