மாண்டாய் சாலையில் டாக்ஸி மோதியதால் அரிய வகை காட்டு மான் உயிரிழப்பு!!

மாண்டாய் சாலையில் டாக்ஸி மோதியதால் அரிய வகை காட்டு மான் உயிரிழப்பு!!

ஜூலை 11-ஆம் தேதி சிங்கப்பூரில் மாண்டாய் சாலையில் அரிய வகை காட்டு மான் மீது ஒரு டாக்ஸி மோதி விபத்துக்குள்ளானது.

காயம் காரணமாக சாம்பார் மான் இறந்து விட்டது.

சாம்பார் மான் சிங்கப்பூரைப் பூர்வீகமாக கொண்டது.

இச்சம்பவம் குறித்து ஜூலை 11-ஆம் தேதி தேசிய பூங்கா வாரியத்திற்கு தகவல் கிடைத்ததாக வனவிலங்கு மேலாண்மை இயக்குனர் கூறினார்.

இந்த சாலை விபத்தை அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த Nparks குழு மான் உயிரிழந்து கிடந்தது.

அதன் உடல் சாலையில் இருந்து அகற்றப்பட்டது.

விபத்தில் தொடர்புடைய டாக்ஸி ComfortDelGro நிறுவனத்திற்கு சொந்தமானது.

ஓட்டுநர்,அதில் பயணித்த பயணி ஆகியோருக்கு காயம் ஏற்படவில்லை என்று ஜூன் 12-ஆம் தேதி ComfortDelGro செய்தித்தொடர்பாளர் கூறினார்.

காடுகள் சூழப்பட்ட சாலைகளில் முக்கியமாக விலங்குகள் கடப்பதைக் குறிக்கும் அடையாளங்கள் உள்ள இடங்களில் வாகன ஓட்டிகள் வேக வரம்பிற்குள் ஓட்ட வேண்டும். விலங்குகள் சாலையைக் கடக்கும் போது வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.