சிங்கப்பூரின் பலேஸ்டியர் குடியிருப்பில் ஒரு வீட்டில் பவர் பேங்க் தீப்பிடித்தது!!

சிங்கப்பூரின் பலேஸ்டியர் குடியிருப்பில் ஒரு வீட்டில் பவர் பேங்க் தீப்பிடித்தது!!

மார்ச் 12ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் பலேஸ்டியர் குடியிருப்பில் 26 வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் பவர் பேங்க் தீப்பிடித்தது.

இந்த சம்பவம் குறித்து அதிகாலை 5.30 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் வருவதற்கு முன்பே சுமார் 100 பேர் அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.