Singapore Breaking News in Tamil

கையில் கோடாரியுடன் சுற்றித் திரிந்தவர் கைது!

சிங்கப்பூரில் 25 வயதுடைய நபர் கையில் கோடாரி உடன் சுற்றித் திரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிங்கப்பூரில் Stamford Road – இல் கடந்து சென்ற கொண்டிருந்த வாகன ஓட்டுநர் அந்த நபரின் செயலை வீடியோவாக பதிவு செய்தார்.

இந்த சம்பவத்தின் போது கலகலப்பு நடந்திருக்கிறது. இதில் 71 வயதுடைய நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு சுமார் 2.30 மணிக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை அதிகாரி கூறினர்.

தகாத வார்த்தைகளை அரசாங்க ஊழியரிடம் பயன்படுத்தியதாகவும், அதிகாரிகளின் கடமையைச் செய்ய விடாமல் அந்த நபர் தடுத்ததாகவும் சந்தேகக்கப்படுகிறது.

கையில் கோடாரியுடன் சுற்றித் திருந்த 25 வயதுடைய நபர் கைதுச் செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து கோடாரி பறிமுதல் செய்யப்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் காயங்கள் கோடாரியால் ஏற்படவில்லை என்று CNA அறிகிறது.

இந்த சம்பவத்தின் விசாரணைத் தொடர்கிறது.