Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் கட்டண அட்டைகளை நகல் எடுத்த சந்தேகத்தில் ஒருவர் கைது!

இந்த மாதம் 7-ஆம் தேதி நகல் எடுக்கப்பட்ட கட்டண அட்டை தானியக்க வங்கி இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறைக்கு புகார் வந்தது.

அதனை அடுத்து 27-வயதுடைய நபரைக் காவல்துறை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தது. கைது செய்யப்படும்போது அவர் நகலெடுக்கும் இயந்திரத்தை வைத்திருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

பிப்ரவரி 16-ஆம் தேதி சந்தேகத்துக்குரிய நபரை விசாரணை அதிகாரிகள் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

அவர் 60-க்கும் அதிகமான கட்டண அட்டைகளில் இருக்கிற விவரங்களை நகலெடுத்து அதனை வெற்று அட்டைகளில் பொருத்தியதாக சந்தேகப்படுகிறது.

வெற்று அட்டைகளில் Europay,Mastercard,Visa அட்டைகளில் உள்ள சில்லுகளையும் அகற்றி பொருத்தியதாக சொல்லப்படுகிறது.

இக்குற்றத்துடன் தொடர்புடைய பொருட்களும் இயந்திரங்களும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணைத் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.