பூகிஸ் ஹோட்டலின் ஓர் அறையில் சடலமாக கிடந்த நபர்!!

பூகிஸ் ஹோட்டலின் ஓர் அறையில் சடலமாக கிடந்த நபர்!!

சிங்கப்பூரில் பூகிஸ் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் போஸில் அக்டோபர் 4-ஆம் தேதி ஆடவர் ஒருவர் சடலமாக கிடந்தார்.அவருக்கு வயது 26.

அக்டோபர் 4-ஆம் தேதி இச்சம்பவம் குறித்து மாலை சுமார் 5.40 மணியளவில் அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது.

சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்த போது ஹோட்டலின் அறையில் அந்த ஆடவர் சடலமாக கிடந்ததை கண்டதாக தெரிவித்தது.

ஆடவரை பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள் அவர் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.இந்த தகவலை 8World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் கொலை சம்பவம் இல்லை என்று காவல்துறை கூறியதாக 8World செய்தித்தளம்தெரிவித்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.