சிங்கப்பூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தேசிய இயக்கம்!!

சிங்கப்பூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தேசிய இயக்கம்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் சமூகத்திற்கு அதிக பங்களிப்பை வழங்குவதற்காக ஒரு தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டங்களின் #Give As One SG என்ற இயக்கம் ஒரு பகுதியாகும்.

சிங்கப்பூரில் வாழும் பின் தங்கிய நிலையில் உள்ள குடும்பங்கள் மேம்படும் வகையில் இந்த திட்டமானது செயல்படும். அவர்களுக்கு உதவும் வகையில் கருணையுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கு உதவிக்கரம் நீட்டுமாறு சில அமைப்புகளையும்,தனிநபர்களையும் இயக்கம் அழைப்பதாக தெரிவித்தது.

இந்த இயக்கம் Yishun இல் சமூக சந்தையில் தொடங்கியது.

சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் மற்றும் SG கேர்ஸ் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றன.

இதில் சுமார் 10,000 குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை விநியோகிப்பார்கள்.

அந்த நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்.