சிங்கப்பூர் ஆயுதப்படையில் களமிறங்கியிருக்கும் புதிய ரக இயந்திரத் துப்பாக்கி!!

சிங்கப்பூர் ஆயுதப்படையில் களமிறங்கியிருக்கும் புதிய ரக இயந்திரத் துப்பாக்கி!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆயுதப்படையில் புதிய இயந்திரத் துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய துப்பாக்கி தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக சுடும் திறன் கொண்டது.

1982 முதல் பயன்பாட்டில் இருந்த அல்டிமேக்ஸ் இயந்திர துப்பாக்கியின் இடத்திற்கு புதிய Cold இயந்திரத் துப்பாக்கி கொண்டுவரப்பட்டுள்ளது.

நகரத்தில் பயிற்சியின் போது வீரர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிடும்.

ஆளில்லா ஆயுதங்கள் கூட எதிரியிடமிருந்து வர வாய்ப்புண்டு.துல்லியமான கோல்ட் இயந்திர துப்பாக்கி அவர்களை சமாளிக்க உதவும்.

சிங்கிள் ஷாட்டில் சுடும் திறன் மற்றும் எளிதாக கையாளுதல் ஆகியவை புதிய இயந்திர துப்பாக்கியின் தனிச்சிறப்புகளாகும்.

இந்த புதிய ஆயுதம் கற்றுக்கொள்வது எளிது, பயன்படுத்த எளிதானது மற்றும் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

லேசர் துணையுடன் இரவில் கூட இதை எளிதாகப் பயன்படுத்தலாம்.

தேசிய சேவைப் பிரிவுகள் விரைவில் புதிய இயந்திரத் துப்பாக்கியைப் பற்றிப் பயிற்சியளிக்கும் என்று ஆயுதப்படை தெரிவித்தது.