செவிலியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்…!!!

செவிலியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட செவிலியர் ஆக விரும்புவோருக்கு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் முதன்மை கவனிப்பை வழங்கும் செவிலியர்களின் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக பட்டப்படிப்பு உருவாக்கப்பட்டது.

இது பாலிடெக்னிக்கில் வழங்கப்படும் டிப்ளமோ படிப்பைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

செவிலியர்களில் இரண்டு வகையாக உள்ளனர்.

நோயாளிகளுக்கு மேம்பட்ட கவனிப்பை வழங்குவதில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற செவிலியர்கள் இருப்பர்.

இரண்டாவதாக அடிப்படை கவனிப்பை வழங்கும் செவிலியர்கள் என இரண்டு வகையாக உள்ளனர்.

இதில் அடிப்படை கவனிப்பை வழங்குபவர் செவிலியர்கள் பதிவு செய்யப்பட்ட செவிலியர்களின் மேற்பார்வையின் கீழ் வேலை செய்கிறார்கள்.

தற்போது தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மூன்றாண்டு திட்டத்திற்கு அடிப்படை கவனிப்பை வழங்கும் செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தின் துவக்க சுகாதார திட்டத்தில் அமைச்சர் ஓங் யீ காங் கலந்து கொண்டார்.

இவ்வாறு திறன்களை வளர்த்துக்கொள்ள வழங்கப்பட்ட வாய்ப்புகள் காரணமாக கடந்த பத்தாண்டுகளில் செவிலியர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறினார்.