Singapore news

வரும் ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் குடும்பங்களுக்காக புதிய திட்டம்!

சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் மாதத்தில் 720 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பொருள், சேவை வரி பற்று சீட்டுகள் சுமார் 950,000 குடும்பங்கள் பெற உள்ளது.

இதனைப் பெற தகுதி பெறும் குடும்பங்கள் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க வேண்டியதில்லை.

வழங்கப்படவிருக்கும் U-Save கழிவு தகுதி பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரட்டிப்பாகும்.

ஏப்ரல்,ஜூலை, அக்டோபர், அடுத்த ஆண்டு ஜனவரி ஆகிய மாதங்களில் அரசாங்கம் வழங்கும் கழிவு பிரித்துக் கொடுக்கப்படும்.

தகுதி பெறுவோரின் கணக்குகளில் அந்தத் தொகை நேரடியாக போடப்படும். இதனை நிதி அமைச்சகம் இன்று தெரிவித்தது.