செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கான புதிய ஆய்வு மையம்..!!

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கான புதிய ஆய்வு மையம்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது அடுத்த கட்டத்தை நோக்கி சீராக முன்னேறி வருகிறது.

சமீப காலமாக அனைத்து நிறுவனங்களிலும் AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

குவாண்டம் எனும் மைக்ரோ டெக்னாலஜியைப் பயன்படுத்துவது குறித்து நாடு பரிசீலித்து வருவதாக மின்சார மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்தார்.

ஆகஸ்ட் 15 அன்று ‘சாண்ட்ஸ்’ எக்ஸ்போ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ‘ஐபிஎம் திங்க் 2024’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தகவல் மற்றும் மின்னணு மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ புதிய ஆய்வகம் அமைப்பது குறித்து அறிவித்தார்.

அடுத்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான புதிய ஆய்வு மையத்தைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஐபிஎம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படுகிறது.

தேசிய பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பள்ளியில் புதிய ஆய்வகம் அமையும்.

தொடக்கத்தில், பசுமை மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கான புதிய ஆய்வு மையம் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது சிக்கலான பணிகளைக் கையாள மிகவும் சக்திவாய்ந்த, திறமையான மற்றும் பல்துறை செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.