தனித்து வாழ விரும்பும் வசதி குறைந்த ஒற்றையருக்காக அறிமுகப்படுத்தபடும் புதிய வாடகைத் திட்டம்!

வீடமைப்பு வளர்ச்சி கழகம் புது வாடகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த புதிய திட்டம் வசதி குறைந்த ஒற்றையர் விடுதி போன்ற குடியிருப்பில் தங்குவதற்காக அறிமுகப்படுகிறது.

அவர்கள் தனித்து வாழவும் மற்றொருவருடன் வீட்டைப் பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக ஓரறை வாடகை குடியிருப்பு வீட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அங் மோ கியோ பகுதியில் உள்ள முன்னைய ஆண்டர்சன் தொடக்க கல்லூரி விடுதியில் அமைந்து இருக்கும் என்று கூறியது.

அதற்காக 480 ஓரறைக் குடியிருப்புகள் இருக்கும் வகையில் விடுதி மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறியது.

இவ்வாண்டு இறுதிக்குள் அதற்கான விண்ணப்பங்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது.

குடியிருப்போர் குளியலறை, சமையலறை போன்ற வசதிகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

2 பிளாக்குகள் தயாராகி விடும்.அவைகள் 11 மாடி கொண்டிருக்கும்.

சுமார் 24 பேருக்கு ஒரு சமையலறையும்,12 பேருக்கு ஒரு கழிவறையும் இருக்கும்.