சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக ஓர் புதிய அம்சம்!! விரைவில்….

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக ஓர் புதிய அம்சம்!! விரைவில்....

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் முதல் சைக்கிள் பூங்கா அடுத்த ஆண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

திறமையான சைக்கிள் ஓட்டுபவர்களை அடையாளம் காணவும் மேம்படுத்தவும் ஒரு சைக்கிள் பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது.

விளையாட்டு வசதிகளை அனைவரும் எளிதில் அணுகும் வகையில் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பூங்கா தொடங்கப்படுகிறது.

சைக்கிள் பூங்காவானது ஒரு கால்பந்து மைதானத்தின் அளவில் உள்ளது. எனவே இளம் குழந்தைகளை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க கூடிய அனைத்து பயிற்சி வசதிகளும் இந்த இடத்தில் அமைந்துள்ளது.

தீவிர பயிற்சியில் ஈடுபட விரும்புவோருக்கு வசதியாக இருப்பதுடன் பயண நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

இதனால் அவர்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற்று SEA கேம்ஸ் மற்றும் ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பதக்கங்களை வெல்ல முடியும்.

சுவா சூ காங் குழுமம் சிங்கப்பூரின் ஒரே BMX சைக்கிள் டிராக்கைக் கொண்டுள்ளது.BMX டிராக் அனைத்து வகையிலும் தேசிய சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான உயர் செயல்திறன் திட்டங்களை ஆதரிக்கிறது.மேலும் இது 2029 SEA கேம்களுக்கான நிகழ்வுகளை நடத்தும்.

பூங்கா சிங்கப்பூர் சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு போன்ற குழுக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

மேலும் விளையாட்டுக்கு இது போன்ற அடித்தளத்தை அமைத்து தருவதால் விளையாட்டின் வளர்ச்சிக்கு அது ஒரு முன்னேற்ற பாதையாக அமையும்.