Latest Sports News Online

சிங்கப்பூரில் மே மாதம் முதல் தேதியிலிருந்து செயல்பட தொடங்கும் புதிய நிறுவனம்!

சிங்கப்பூரில் Premier டாக்ஸி,Strides டாக்ஸி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்துள்ளது.

இரண்டும் இணைந்து சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய டாக்ஸி நிறுவனமாகி உள்ளது.

இன்று SMRT எனும் போக்குவரத்து நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.அதில் இந்த விவரங்கள் குறிப்பிட்டு இருந்தது.

இந்த புதிய நிறுவனத்தின் பெயர் Strides Premier.

இந்த புதிய நிறுவனம் மே மாதம் முதல் தேதியிலிருந்து செயல்பட ஆரம்பிக்கும்.

இரு நிறுவனங்களிலும் கடந்த பிப்ரவரி மாதத் தகவல்படி மொத்தம் 2,500 டாக்ஸிகள் உள்ளன.

இதுவரை இரண்டாவது இடத்தில் Trans-Cab நிறுவனம். அதில் 2,170 டாக்ஸிகள் உள்ளன.

அதிகமான டாக்ஸிகளைக் கொண்ட நிறுவனம் ComfortDelGro.அந்நிறுவனத்தில் 8,700 டாக்ஸிகள் உள்ளன.

கிருமி பரவலுக்கு முந்தைய நிலைக்கு டாக்ஸிகளுக்கான தேவை திரும்பி உள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் இணைவது பயணிகளுக்கும்,ஓட்டுநர்களுக்கும் சாதகமாக அமையும் என SMRT நிறுவனம் கூறியது.