latest Singapore news

வரும் 28-ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் நடப்புக்கு வரும் புதிய மாற்றம்!

தீவு விரைவுசாலையின்(PIE) வலப்பக்கத்தில் இருக்கும் வெளியேறும் வாயில் இடப்பக்கத்திற்கு மாற்றப்பட உள்ளது.

இம்மாதம் 28-ஆம் தேதி காலை 5 மணி முதல் அந்த மாற்றம் அமலுக்கு வரும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள வெளியேறும் வாயில் வழியாக Dunearn ரோட்டுக்கும்,Clementi ரோட்டுக்கும் செல்லலாம்.

இன்னும் சுலபமாக தீவு விரைவுச் சாலையிலிருந்து வெளியேறுவதற்கு அந்த புதிய இடப்பக்க வாயில் வழி அமைக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

வரும் வாரங்களில் வாகனமோட்டிகளுக்கு தீவு விரைவுச் சாலையின் (PIE) மாற்றப்படுவதை தெரிவிக்கும் வகையில் சாலைக் குறியீடுகள் வைக்கப்படும் என்று ஆணையம் கூறியது.