Singapore news

சிங்கப்பூரில் வர உள்ள புதிய மாற்றம்!

சிங்கப்பூரில் உள்ள Singpost கட்டணங்களை மாற்றி அமைப்பதற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தொடர்பு தகவல் மூத்த துணை அமைச்சர் Tan Kiat How தெரிவித்தார்.

அது நீடித்து நிலைத்திருப்பதற்காக அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அஞ்சல் சேவைகளை மேற்பாற்வையிடுகிறது.அதனுடன் இணைந்து அதன் வர்த்தக நடவடிக்கைகளை மறுஆய்வு செய்கிறதாக கூறினார்.

கட்டணங்களை மாற்றுவது அரசாங்க நிதியுதவி இல்லாமல் Singpost தனது வணிகத்தைத் தொடர வழி அமைக்கும் என்றும் கூறினார்.

கடந்த ஆண்டின் உள்ளூர் அஞ்சல்களின் எண்ணிக்கை 216 மில்லியனாக சரிந்தது.அது 490 மில்லியனாக 2015-ஆம் ஆண்டில் இருந்தது.

தற்போது இன்டர்நெட் தொடர்புகள் வழக்கமாகிவிட்டதால் அஞ்சல்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.