ஒரு மாத குழந்தையை தொட்டிலுக்கு பதிலாக அடுப்பில் வைத்த தாய்!!

அமெரிக்காவில், தனது ஒரு மாத குழந்தையை கொன்றதாக 26 வயதான பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த பெண்மணி தனது குழந்தையை தூங்க வைக்கும் போது, தொட்டிலுக்கு பதிலாக அடுப்பில் வைத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் குழந்தையின் உடலில் தீக்காயங்கள் இருந்ததாக அவர்கள் கூறினர்.

விசாரணையில் அந்த பெண் சிறுவயதிலிருந்தே மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்படலாம்.