பாதுகாப்பு சோதனையின் போது பெண் காவல் அதிகாரியை தாக்கிய ஆடவரால் பரபரப்பு….!!!

பாதுகாப்பு சோதனையின் போது பெண் காவல் அதிகாரியை தாக்கிய ஆடவரால் பரபரப்பு....!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் லோரோங் சுவான் MRT நிலையத்தில் போலீஸ் அதிகாரியை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 8.08 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில்,MRT நிலையத்தில் நடந்த பாதுகாப்பு சோதனையின் போது அந்த நபர் ஒத்துழைக்கவில்லை என்பது தெரியவந்தது.

65 வயதான பெண் போலீஸ் அதிகாரி, அந்த ஆணின் பையை சோதனை செய்ய கேட்டபோது, ​​அந்த நபர் மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர் அதிகாரியின் கைகளை பிடித்து தள்ளினார்.


இதனால் கீழே விழுந்த பெண் போலீஸ் அதிகாரி பின்னோக்கி விழுந்ததில் அவரின் தலையில் அடிபட்டது.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங் மோ கியோ காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு சந்தேக நபரை (ஆகஸ்ட் 18) அன்று கைது செய்தனர்.

இதனால் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு ஓராண்டு சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.