வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றில் தவறி விழுந்த தனது செல்லப்பிராணி நாயை காப்பாற்ற தானும் குதித்த நபர்!!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றில் தவறி விழுந்த தனது செல்லப்பிராணி நாயை காப்பாற்ற தானும் குதித்த நபர்!!

லாஸ் ஏஞ்சல்ஸில் கடுமையான புயல் காரணமாக கனமழை பெய்தது.

கனமழையைத் தொடர்ந்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ஆற்றின் கரையோரத்தில் ஒரு நபர் தனது நாயை அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது செல்லப்பிராணி ஆற்றில் விழுந்தது.

ஆற்றில் விழுந்த தனது நாயைக் காப்பாற்ற அந்த நபர் ஆற்றில் குதித்தார்.

இச்சம்பவம் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று நடந்தது.

தீயணைப்பு வீரர்கள் அந்த நபரை ஹெலிகாப்டர் மூலம் ஆற்றிலிருந்து பாதுகாப்பாக மீட்டனர்.

பிறகு அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் நாய் பத்திரமாக கரைக்கு நீந்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆற்றில் இருந்து சற்று விலகி இருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.