வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கடலில் விழுந்த மலேசியா கடலோர காவல் ஹெலிகாப்டர்!!

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கடலில் விழுந்த மலேசியா கடலோர காவல் ஹெலிகாப்டர்!!

மார்ச் 5ஆம் தேதி அன்று மலேசிய கடலோரக் காவல் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அங்சா தீவுக்கு அருகே வழக்கமான பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.