ஒரு மகிழ்ச்சியான செய்தி!!சிங்கப்பூரில் அதிகரிக்க உள்ள சம்பளம்!!

சிங்கப்பூரில் சராசரி சம்பளத்தின் உயர்வானது நடப்பு ஆண்டு 2023 ஐ விட 2024 லில் 4% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IT ( தகவல் தொழில்நுட்ப துறை) யில் பணிபுரிவோர்களுக்கு 4.5% அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இத்தகைய தகவல்களை , மேம்பட்ட தரவு விபரங்கள் மற்றும் பகுப்பாய்வு சேவைகள் மேற்கொள்ளும் Aon Plc ( உலகளாவிய தொழில்துறை சேவை மற்றும் மேலாண்மை) நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2021 ஆம் ஆண்டில் ஒரு தனிப்பட்ட நபரின் சம்பளமானது S$ 4680 ஆக இருந்தது , பின் அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு சற்று கூடுதலாக S$ 5070 ஆக அதிகரித்து உள்ளதாக MOM அமைச்சகத்தின் புள்ளி விபரப் பட்டியலில் அறியப்படுகிறது.

இதனை தொடர்ந்து 2023 இல் பல்வேறு நிறுவனங்கள் திறமையான பணியாளர்களை அதிக சம்பளங்களுடன் பணியமர்த்த எண்ணியும் தனது தேவைகளில் குறைந்த சதவீதத்திலேயே ஆட்களை பணியமர்த்தியுள்ளது என உலகலாவிய தகவல் சேவை நிறுவனமான Morgan Mckinley ஒரு தரவு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

மேலும் வரும் ஆண்டில் திறமையான தொழிலாளர்களை பணி அமர்த்துவதற்காக அதிகபட்ச சம்பள உயர்வும் , பல்வேறு நலன்களையும் செய்து தர போவதாக முக்கிய சிங்கப்பூர் நிறுவனங்களில் சில முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.