சமைக்கப்பட்ட உணவை கவனிக்காமல் விட்டு சென்றதால் ஏற்பட்ட தீ!! புகையால் சூழப்பட்ட கடை!!

சமைக்கப்பட்ட உணவை கவனிக்காமல் விட்டு சென்றதால் ஏற்பட்ட தீ!! புகையால் சூழப்பட்ட கடை!!

சிங்கப்பூரில் உள்ள நியூட்டன் உணவு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் மார்ச் 24ஆம் தேதி அன்று நடந்தது.

இந்த தீ விபத்து குறித்து இரவு 9:30 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உணவகத்தில் உணவு சமைக்கப்பட்டு கொண்டிருந்தபோது அதை கவனிக்காமல் விட்டுச் சென்றதே இந்த தீ விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.