மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ!! மக்கள் வெளியேற்றம்!!

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ!! மக்கள் வெளியேற்றம்!!

சிங்கப்பூரின் அட்மிராலிட்டி குடியிருப்பில் உள்ள பிளாக் 483ல் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் மார்ச் 24 ஆம் தேதி அன்று நடந்தது.

இந்த தீ விபத்து குறித்து இரவு 7 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் படுக்கை அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும், மின்சாதனங்கள் பயன்பாட்டில் இல்லாத போது அவற்றை அணைக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.