சமையலறை பொருட்களில் ஏற்பட்ட தீ!! எப்படி ஏற்பட்டது?

சமையலறை பொருட்களில் ஏற்பட்ட தீ!! எப்படி ஏற்பட்டது?

சிங்கப்பூரில் உள்ள 180,பென்கூலன் தெருவில் அமைந்துள்ள The Bencoolen கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் ஏப்ரல் 15-ஆம் தேதி(நேற்று) நடந்தது.

இந்த தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு மதியம் சுமார் 2.15 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தது.

கட்டிடத்திலிருந்து 100 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அந்த கட்டத்தின் 11-ஆவது தளத்தில் உள்ள சமையலறைப் பொருட்களில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.