விடுதியில் ஏற்பட்ட தீ!! தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த 13 மாணவர்கள்!!

விடுதியில் ஏற்பட்ட தீ!! தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த 13 மாணவர்கள்!!

மத்திய சீனாவில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் ஜனவரி 19ஆம் தேதி அன்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 13 பேர் மாணவர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த தீ விபத்து குறித்து இரவு 11 மணி அளவில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் இரவு 11.38 மணி அளவில் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.