அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து…!!!இருவர் மருத்துவமனையில் அனுமதி…!!!

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து...!!!இருவர் மருத்துவமனையில் அனுமதி...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள கிரேட் வேர்ல்ட் சர்வீஸ்டு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் புகையை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

தீயினால் வீட்டின் மற்ற பகுதிகளும் சேதமடைந்தன.

குடிமை தற்காப்புப் படை இச்சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகஸ்ட் 21 மாலை 4.50 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகஸ்ட் 21 மாலை 4.50 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

கிரேட் வேர்ல்ட் சர்வீஸ்டு அடுக்குமாடி குடியிருப்பில் 18வது மாடியில் இருந்து கரும்புகை வெளிவந்தது.

தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பார்த்த போது வீட்டின் சமையல் அறை முற்றிலும் சேதம் அடைந்து காணப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சுமார் 150 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு அருகில்
வசித்தவர்கள் புகையை சுவாசித்ததால் அவர்கள் உடனடியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

வீட்டில் யாரும் இல்லாததால் முறையான கவனிப்பின்றி இருந்த சமையலறை தீப்பற்றியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow us on : click here ⬇️